காணாதிருப்பதே மேல்



சந்தித்தபோது பேச்சை 
நிறுத்தினாய்
எழுத சொல்லி கேட்ட
நீ,,,
எதிர் நிற்க ஏன் வெறுக்கிறாய்?

எழுத்தில் வழியும்
எண்ணம் பிடிக்கும்
உனக்கு,
என்னை ஏன் பிடிக்கவில்லை?

காகிதத்தில் வரையும்
கோடுகளில் மயங்கும்
நீ,,,
காண வியக்கும் காரணம்?

எழுத்தில் மூக்குமில்லை
முழியுமில்லை
முண்டம் ரசித்த
நீ,,,
உருவம் தவிர்க்கிறாய்,

எண்ணம் வழியும் எழுத்தை
எண்ணெய் வ்ழியும் முகத்தில்
எதிர்ப்பார்க்கவில்லை
நீ...
தவிர்த்திருக்கலாம் ,

தவிக்கும் உன் முகம்,
தகிக்கும் என் அகம்,
தெரிய வாய்ப்பில்லை
உனக்கு
நிஜம் மறுத்து நிழலை
அனைக்கிறாய்,!!

No comments:

Post a Comment