தூர வீசியதில்



எரியப்பட்ட நான்,
வரம் கேட்டு வளர்த்த
வேள்விதீயில்,

ஞாபகம் மாறாதிருக்க
மதுகடைதான்
ஞானக்கூடம்,

விழித்திறந்தால்
வீதி எங்கும் அவளின்
வியாபித்தல்,

மூடிய விழிக்குள் சிக்கிய
முடி உறுத்தல்
கசங்கலாய்,

சக்கையாய் வீசியதில்
இன்னும் எண்ணம்
பிசுபிசுப்பு,

மறந்தாள் என்ற
கேள்வி மனம் மறுக்க
மறு கேள்விக்குள்,

பாதசுவட்டில் முத்தம்
பதிக்கும் கண்ணீர் துளி
ஈரம் காயாதிருக்க,

Comments

Popular Posts