வீசும் கல்லில் விசை
ஆசையின் ஆழத்தில்
மூழ்கிபோனது,
துவண்டுபோன கையில்
துளி கல்லும் இல்லை,
எரிவதில் கிடைக்கும்
சந்தோஷம் இல்லை
அலை ஓசையும்
அது தவழும் திசையும்
கரை மோதி கறைந்திடும்
கலையும் காண்பதிற்க்கில்லை,
விளிம்பில் இருந்த போது
ஆழம் தெரியாது,
ஆழம் தெரிந்த போது
விளிம்பில் பிடி நழுவி,
தொட்டதும் சிலிர்த்து
தெரிக்கும் துளி
அதன் மேலேயே வீழ்ந்து
மூழ செய்யும் மோகம்
அமிழ்ந்து ஆழமாய்,
கரையின் காத்திருப்பு
குளம் வீசுமோ இனி
கல் ஒன்றை,?
No comments:
Post a Comment