கடைசிவரை--2
-----------------------

கடைசிவரை 
கண்ணில்
தூசு விழுந்ததாய்
கண்ணீர் துடைத்து
தப்பித்தாய்!!!

நெஞ்சில் பதிந்த
நினைவை துடைக்க
எதை சொல்லி
தப்பிப்பாய்??








கடைசிவரை--3
===============

கடைசிவரை உன்
பார்வை வாசல்புறமே
குதிரையில் வந்து
கொண்டு செல்வான்
என்று,,,,

மனம் குதிரையின்
வேகத்தில் இருந்திருக்கும்,
மனம் உடைத்து போட்ட
உறவுகள் செத்திடுவோம்
எல்லோரும் என்ற
விலங்கை பூட்டீயதரியுமோ?





கடைசிவரை--4
---------------------
கடைசிவரை
இனி பார்க்க கூடாதென்ற
முடிவில்
நீயோ, நானோ,
யோக்கியவான்களாய்
இல்லை,???








கடைசிவரை--5
============
கடைசிவரை
நமக்கு யாரும்
எதிராய் இல்லை
ஏனோ?
நாம்
சேரவில்லை,








கடைசிவரை--6
-------------------
கடைசிவரை
நம்மை சேராதிருக்க
கங்கணம் கட்டியவர்கள்
இங்(க்)கனம் இல்லை











கடைசிவரை--7
-------------------
கடைசிவரை
பிரியக்கூடாதென்றிருந்தோம்
கடைசியில்
பிரியக்கூட
நின்றிருந்தோம்,

யார் முதல்
யார் கடைசி
கடைசிவரை
இருந்தால்
பார்ப்போம்!!!!!!






No comments:

Post a Comment