ஜன்னல் பூக்கள்

ஜன்னல் பூக்கள

தெருமுனை 
திரும்புகையில்
ஜன்னல் திறக்கும்,

வீடூ கடக்கையில்
இரு
கண்கள் துடிக்கும்,
திரும்பும் செய்தி
யார் தருவர்
உன்னிடம்!!

பட்டுகண்ணம்
தோய்க்கும்
ஜன்னல்
கம்பியில் ஈரம்
காய்வதாலா?

சிட்டு குருவிகள்
இரண்டு
நம் கதை பேசும்
மொழிகள்
அறிந்ததாலா?

சமிஞ்ஞை ஏதும்
தந்ததில்லை
வரும் சமயம் ஏதும்
அறிந்ததில்லை,

பிறகெப்படி பூக்கிறாய்
ஜன்னலில்,
சமயோகிதி நீ..?

Comments

Popular Posts