கூட்டின்......

...


கதவு திறக்க 
பறக்க
படபடக்க
சிலுப்பியது
இறகை,

மெல்ல நடந்து
மேலும் கீழும்
பார்த்து

கிந்தியது மனம்
பறக்கட்டும்
சுதந்திரமாய்,

திரும்ப
உள்ளுக்குள்
நடந்தது
வேகமாய்
மனம்
பறக்க

வாசல் வந்தது
குதித்தது இயல்பை
மறந்து,மனம்
கொதித்தது
பழக்கியது
பாவம்,

No comments:

Post a Comment