வெட்டும் அருவாளும் வேல வந்தா
வெட்ட வரும், குத்தும் ஒமீசை அருவாளோ
என் குடல்வரை கிழிக்குதையா..,
பத்தி எரிஞ்சதையா இப்பாதகத்தி மனதெல்லம்
கச்சைக்கூட கருகுதையா
கண்ணுக்குள்ள என்ன வச்சி
இந்த காரியத்த செஞ்சீக.,,
பேருவச்ச ஏஆத்தா,மாரில் காத்த
ஏஅப்பன்,முதுகிலாடிய எம்பொறப்பு
மூனுயிரு தடுத்துச்சையா இருந்தும்
ஏஉசுரு உம்மேல.,,
எவ்வூரு பஞ்சாயத்து எத்தனையோ
எடுத்துசொல்லி,தடுக்கத்தான்
தவிச்சதையா தாவித்தாவி
குதித்ததையா ,ஏராசா நீ
மிரட்டையிலே பஞ்சு பஞ்சாச்சே
பஞ்சாயத்து துண்டாச்சே..,
உம்மேல உள்ள ஆசயிலே வெட்கம்
வெலகிபோச்சி வெவரமாக நின்னாச்சி
எட்டி இடரி விட்டு எங்கூட்ட தள்ளிவிட்டு
உங்கூட நானும் வந்தே நடுஜாம வேலையிலே
உன் ஊர காணுமுன்னே ,
மஞ்சைகொல்லை சத்திரத்தில் மயங்கியே
ஒம்மடியில் கூறுகெட்டு கூடி விட்டேன்
கும்மாளமா நினைச்சுபுட்டேன்,
விடியுமுன்னே பொட்டிதூக்கி பெட்டிப்பாம்மா
நா நடந்தேன்
வீடு வந்து ஆழியூரு, விதியே வந்து நீ பாரு?
உன் குடிச மின்னால குத்துக்கல்லா
ஒருத்திருந்தா, அத்தேன்னு வாயெடுத்தேன்
தூத்தேரின்னு துப்பி புட்டா,
சிதேவி நாயிருக்க இம்மூதேவி இங்கென்ன
இட்டாந்தே சக்களத்தி எனக்கு வேணாம்?
சாடையிலே திட்டிபுட்டா/
பொட்டுத்தெரித்தம்மா பொலபொலன்னு
கொட்டுதம்மா?இளிச்சி ஏமாத்தி
இப்ப நான் சக்காளத்தி
எம்பாட்டில் சொல்லிபுட்டேன் ,
வெவரமெல்லாம் கொட்டிபுட்டேன்
புத்தியோடு பொலச்சுக்கோ???
No comments:
Post a Comment