எரிவதா? வேண்டாமா?
யோசிக்கும் சமயமெல்லாம்
எதிர் நிற்கும்
நீ,,,,
காலையில் கசங்கிய
பூவிடம் பேசியபோது,
துடைப்பதா ?வேண்டாமா?
கைதுண்டெடுக்கும்
நேரத்தில் கண்ணாடியில்
நீ,,,
உணவுண்ட வாயுடன்
முத்தம் தந்தபோது,
இழுப்பதா? வேண்டாமா?
முயலும்போதெல்லாம்
புரண்டு படுக்கும்
நீ,,,,
சுற்றிக்கொண்டு படுத்திருக்கும்
பாதிசேலையை இழுக்கும்போது
அழுவதா, வேண்டாமா?
அறுவை சிகிச்சையின்
ஆடை யுடுத்திய சமயம்
கை பிடித்த வண்ணம்
நீ,,,,
உயிருடன் காண்போமா
என கண்கள் பேசிய போது?
No comments:
Post a Comment