மழை நாடகம்

நீல அரிதாரம்
கlலைந்து
மேகச்சாயம் பூசி
கருமேக மைதீட்டலிட்டு
மழை நாடகம்
அரங்கேற இருக்கும்

மழை நாடகம்

ஒத்திகைக்கு ஒவ்வொரு
வாத்திய சத்தமாய்
இடி இடித்து
அலங்காரமேடை
வண்ண ஒளிவிளக்காய்
மின்னலும் மின்ன
மாறி காண்பிக்கும்
மாரிவர,,,,,,

திரைவிலக ஒளி 
கொட்டும் பூவாய்
கொட்டும் மழை

நனைந்து கலையும்
பூச்சின் கலவை
ஒடையில் ஓடும்
தோற்றமாய்
வண்ணம் வான் வில்லில்
தோன்றும் 
அழகாய்,

No comments:

Post a Comment