இது ஒன்றும் புதிதல்லவே?

அவசர வேலையா செல்லும்போது
அசிங்கத்தை மிதித்து விட்டு
உதர முடியாமலும்
தடவ படிக்கல்லோ
கல்லோ கிடைக்கமல் அழுத்ததுண்டா?
எப்போதேணும்.,

இன்று இப்படம் கடைசி,
தெரிந்தவரிடம்
இரவலாக சைக்கிள் வாங்கி
வேர்க்க விருவிருக்க
வேகமாக
போய் சைக்கிள் டோக்கணும்
கிடைத்து கெளண்டர் போனதும்
ஹவுஸ்புல் டக்கென விழ
வழிதலை துடைத்ததுண்டா?
எப்போதேணும்.,

அவளை விரும்பி
அவளும் நேசித்து
விசயம் தெரிந்து இரு வீட்டாரும்
பேசி முடிக்கும் தறுவாயில் வேடன்
ஒரு மூடன் 
பேர் சொன்னால் அவன் ஒரு
கேடன்
உலை வைத்து 
எதிர்ரெதிர் திசை மாரிப்போனதும்
கண்ணீர் இன்றி!!! அழுத அனுபவம்
ஏதுமுண்டா??

பூ வாங்கி மனதுநிறைய மணம்பூண்டு
கோதையில்லால் 
குடியில்(வீட்டில்)
இருக்க கூத்துக்கட்டிய
மனவேட்கையில் பேரம்பேசா பழமும்
வாங்கி உள்ளே பொங்கும் பரவசத்தை
தெருவிற்க்கு
தெரியாதிருக்க மறைந்த கள்ளன் போல்,
குடிபுகுந்தாங்கே
முகம்காட்டா
இல்லால் ஒரு சொல்லால் 
கொடியேற்றியகாதை கோதை விளக்க
அந்த நாள் வந்தகதை கேட்டதும்
குழிந்தே பிழிந்தே
கொதித்தே போனதுண்டா?
எப்போதேனும்?

1 comment:

  1. நன்றாக் இருக்கிறது..கொஞ்சம் எழுத்துப் பிழையுடன்....தவிர்க்கலாமே...உலகமே உங்களை ரசிக்கிறது...

    ReplyDelete