இரவலாய் ஒரு இரவு

பகலை ஆதவன்
கூட்டிச்சென்றபின்
இரவை எப்படி
விரட்டுவது
என்ற போராட்டமே
மனதில்,

இரவை போக்கும்
வித்தையரிந்தவர்
யாரேனும்
உண்டாசொல்லிதாருங்கள்,

என் இரவின்
நீளம் கூடிவிட்டது,
நான் காணும்
விடியலை
இருளில் ஒளித்துக்கொண்டு
ஒளி விடமறுக்கிறது,

யாரேனும்!
அழைத்துச்செல்லுங்கள்
இந்த இம்சை இரவை
இரவலாயினும்
தருகிறேன்
இரவில்லாத
இடம் வேண்டும்,

No comments:

Post a Comment