கடைசி கடைசியாய்

கடைசி முறை சந்தித்திபோது
கண்களும் சந்திக்கவில்லை
கைகளும் பிணையவில்லை
மெளனம் மட்டுமே
இழையோடியது

மனம் வேண்டியது
மண்டியிட்டு
மறுபடி சந்திக்கசெய்,?

உரையாடலும்
அதிகமில்லை
உள்ளத்தின் ஆட்டம்
தவிர்க்க,

உள்ளம் மட்டும் 
உள்ளே உறைந்துபோய்
உருகிவிடுமோ என
கண்ணீரில் அணை,

வெரும் பார்வையில்
உரமாய் நினைவுத்தூவ
விளைச்சலில்
அதிக லாபமீட்ட
வேரூண்டிய பயிர்ப்பு,

விடைபெற கடைசி நொடி
இறக்கவேண்டி
இருவரின் பிரார்த்தனை
பலித்ததா ? பழி பீடம்
இரு தலை கவிழ்ந்து,

வெளியேற மண்ணில்
புதைந்து பார்வை
வின் பொழியா மழை
விளைந்து விடுமோ
மறுபடி தேடல்
ஒடியே ,,,,?


No comments:

Post a Comment