கசிந்து கொண்டிருந்தப்போது

கசிந்து கொண்டிருந்தப்போது


மரப்பட்டையாய் பெயர்ந்து 
கொண்டிருக்கும்
ஞாபகம்,

அழுத சமயமும் ஆங்காங்கே
மரப்பிசினாய்
திடமாய்

தொட்டுப்பேசிய சமயம்
கரையான்
அரித்து

இதில்தான் துளிர்த்தது
என்பதையரிய
கிளை வடுக்கள்

இடம் மாறாதிருக்கவே
வேராய் புதைந்து
மறைந்து,

முதிர்ந்த நரை
கூடியதாய்
மாவென
உதிர்ந்து,

Comments

Popular Posts