சோதரி

நாகரிக நாவண்மை
முடிவெடுக்கும் தூரிதம்
அங்க அங்கலாய்ப்பில்லா
ஆத்மார்தம்

பிடி இடம் கிடைத்தால்
மடியில் விழும் பழமாய்
பாச சோதரி அவள்

எட்டாதூரம் இருந்தும்
ஏட்டின் சாரம் அரிந்தவள்
என் பாட்டின் சோரம்
குறைப்பவள்

ஒரு வீட்டிர்க்கு விளக்கானாள்
பின் அவ்வீட்டீன் விலங்கானாள்
ஏவலுக்கும் தூவளுக்கும்
நன்றிக்கு நாயாய்யும்
கட்டிபோடா தாயானாள்

எரிக்கும் கொள்ளி வாய்
வார்த்தைகளில் தீயானாள்
நிதம் நேரம் மட்டும்
கிடைக்காது உண்ண
அதனாலேயே நோய்க்கும்
ஆளானாள்

திட்டியே தாபம் தேடும்
தீயவன் அவனின் கட்டிலில்
அசை பிணமாய் இச்சை
தீர தீர்வானாள்,


Comments

Popular Posts