மிதவை எண்ணம்
மீளும் அலை வண்ணம்
ஒதுங்கியே வழி விடும்
ஓட்ட பாதை
அலைமேல் தழுவலாய்
தாவல் ,
முட்டி மோதி முந்தி செல்லும்
எண்ணமிலா ஏகாந்தம்
காற்றில் கை கோர்த்து
கவிதையாடல்
பயந்து மூழ்காமை
எதிராய் எதிலும்
எதிர்ப்பாய்,
மோதி ஒதுங்கும்
ஒவ்வாமை
எதிர் நீச்சலில்
நிலையாய் நீந்தல்
கரையில் ஒதுங்கி
கையில் சிக்காது
வித்தக வித்தை
ஈரமாய் எப்போதும்
ஒட்டாது,
காய்ந்தே நீர்
காணாது,
No comments:
Post a Comment