என்ன மாயம்

இரவின் முடிச்சவிழ்க்க
வெட்ட வெளிச்சமானது
எல்லோரும்
பார்க்க,

உள்ளாடை அளவு கேட்டு
காதலில் சிற்றின்ப
வெறி,

பேருந்தில் இடி பட்டு
வெளியேற பிரசவ
வலி,

சந்தேகிக்கிறான் கணவன்
கள்ளக்காதலனின்
குற்றச்சாட்டு,

சொர்க்கத்தின் முடிவு
நரக வாசலிலிருந்து
ஆரம்பம்,

கதைக்கும்,கவிதைக்கும்
வி”தைத்திருக்கும்
உறவு வரிகளாய்,

No comments:

Post a Comment