மறைகிறதுஞாபகம் இல்லை
மறந்தே விட்டேன்
என நினைக்க,
பவுர்ணமியாய்
வெட்ட
வெளியில்,,,நீ
தொலைவாய்
தூரமாகிவிட்டேன்
பார்க்க இயலாது
என இருக்க,
வட்டமாய் ஒரு
ஆரம்
புள்ளியில்,,, நீ
விழுகிறேன்
ஆழமாய்
மேலிருந்து
திரும்ப முடியாது
என நினைக்க,
தாங்கிய
நதியில்,,,நீ
அடிக்கிறது
அலை
நனைந்துவிட்டேன்
மீண்டும் வராது
கரையேற,
கால்
பிடித்திழுக்கும்,,நீ