கூட்டாஞ்சோறு
================
கொஞ்சம் இலையை கிள்ளிபோட்டாள்
மண்ணை கொஞ்சம் தூவினாள்
சுவற்றின் சாயத்தை சுரண்டி
சுள்ளிகலையும் சேர்த்து
நெருப்பில்லாத அடுப்பில்
ஏற்றி நெடுநேரம் கிண்டி
நெய்க்கு பதிலாய் நீரை வார்த்து
வந்திருக்கும் விருந்தாளி நண்பர்களுக்கு
தரையை இலையாக்கி
சாப்பிடலாம் வாங்க என அழைத்து
சூடில்லாத பானையை
துணிபிடித்து இறக்கி
கொஞ்சம் உப்பு பாரேன் என்று
தோழியின் வாயருகே சமிஞை
காண்பித்து பரிமார
சுவைக்கூட்டி விருந்தாளிகள்
உண்ண இனிதே நடந்தேரியது
என் நாற்காலியின் நாற்கால்களின்
இடையே கவனித்த எனக்கும்
ஒரு கவளம் உணவு தரப்பட்டது
சைகையாய் உண்டேன் உண்மை
குழந்தையாக ஏங்கியது ?

ப(ய)ணம்


இரயில் தாமதம் நள்ளிரவில் தனியாக
இறங்குகிறேன் இனி இரண்டு மைல் நடக்கவேண்டும்
யாரவது கண்ணுக்கு தென்
அதோ கொடிக்காட்டியவர் நடையில் தூரிதம்
ஏன் தம்பி எனக்கேட்க அப்பாட துணைக்கி
அவர் குவாட்ரஸ் நுழைந்துவிட்டார்
எவண்டா இவ்வளவு கிட்டே இரயில்வே
குடியிருப்பு கட்டியது இந்த ஒற்றையடிபாதைத்தான்
வீட்டிர்க்கு அருகில் இட்டுச்செல்லும்
நடக்கிறேன் பாதை பின் செல்ல
மறுக்கிறது முங்கில் தோப்பு உராய்ப்பு
பயம் தொற்றிக்கொள்கிறது
காற்றுக்கூட ஏதோ பேசுகிறது
ஊளை சத்தம் ஏது பகலில் எங்கே போனது
இந்த நரிகள் ? டேய் பேய் இருந்தால் பூவாசம் வரும்
ச்சே இந்த சமயத்தில்தான் நண்பன் சொன்னது
நினைவுக்கு வருமா? ஆமா பூ வாசம்
ஐயோ இந்த பேய்களுக்கு யார் பூ கட்டிதருவார்கள்
இந்நேரத்தில் இது அதுகளின் காதில்
விழுந்திடுமோ ?ப்பபயம்
இடையில் இந்த இடுகாடு கடக்கவேண்டும்
நாம யாருக்கு என்ன செய்தோம்
கோடிவீட்டு கிழவி எப்படா சாவும்
எனக்கேட்டதும் இப்ப ஞாபகம் வருது
செத்த கிழவி என் நண்பனின் பாட்டி
நாமதான் நண்பனை திட்டியதே இல்லையே
கிழவி என் சொந்த பாட்டி மாதிரி
அது ஒரு உருவம் அடி எடுக்க மறுக்கிறது
கடந்தாக வேண்டும் ஆகாயம் நோக்கியே பார்வை
கிட்டே வந்தாகிவிட்டது அடச்சே
எல்லைக்கல் பகலில் இதை நாம பார்த்தில்லையே?
முடிவெடுக்கிறது மனம் இனி
பகல் நேரத்தில் எல்லாவற்றையும் பார்த்திடனும்
உனக்குத்தெரியுமா மிருகங்களுக்கு
பேய் பிசாசெல்லாம் கண்ணுக்கு தெரியுமாம்
என்ன எழவுடா இது எழவு இதும் பயம்தானா
ஒரு நாய் ஒர் இடத்தையே உற்றுப்பார்த்து
அமர்ந்திருக்கிறது ஆஹா ஏன் அதைப்பார்த்தோம்
ஓடலாமா துரத்துமே மாரியம்மன் கோவில்
மங்கிய வெளிச்சம் மாரியம்மனை பகலிலேயே பார்க்க பயம்
இவனுவ ஏன் மரக்கதவு போட்டு பூட்டலை
கிரில் கதவு ஒரு எண்ணைவிளக்கு மாரியம்மன் எதிரே
இன்னும் விகாரமா தெரியும் ?கடகடக்கவேண்டும்
நாமா மாரியம்மனை கும்பிடலயே தவிர
ஒருநாளும் திட்டியதில்லை இது மாரியம்மன்குத்தெரியும்
திடுதிப்பென்று ஒரு வீடு கொல்லையில் சத்தம்
மாடு மிரளுகிறது மிருகங்களுக்குத்தான்........
இதுவேற ,நாம கவுன்சிலரா வந்து இந்த
இடங்களுக்கெல்லாம் முத்லில் விளக்குப்போடணும்
தெரு முக்கு வந்தாகிவிட்டது
பால்கார முருகையன் இதோ ஏன் தம்பி
இன்னேரத்தில் ?ஒண்ணுமில்லண்ண
இரவுல நம்ம ஊரு எப்படி இருக்குன்னு
பார்க்கத்தான் லேட்டா வரேன்?
வீடு வந்தாச்சு கதவுதட்ட அம்மா திறக்க
ஏண்டா இந்நேரத்தில்
எனக்கென்னம்மா பயம் நான் ஆம்பிளைல?
செருப்புடன் எல்லாவற்றையும் கலட்டிவிட்டு
உள் சென்றேன்?

காயுதே

ஒரு காய்
ஒருக்காய்
மனக்கிருக்காய்
ஆகிருக்காய்
செருக்காய்
அது

தெரிய
புதிய மிருக்காய்
தேடுதே

சொல்லில்



வலி மிகும்போது
சொல் கனக்கிறது

ஆறுதல் சொல்,
சொல்லாதே
மெளனம் போதும்
கைப்படமல்
தடவி செல்லும்
காற்றாய்
இலகும் 
சொல்லாமல்

அடையாளமாய்



கால புத்தகத்தில்
உன்
பக்கம்
மறக்காதிருக்க
அடையாளமாய்
விளிம்பில்
மடித்தேன்

சில வேளை அப்பக்கமே
முதலில் அழகாய்
திறக்கும்
தவிர்த்து தாவிச்செல்வேன்
அடுத்தப்பக்கம்

ஏனோ மடித்த
விளிம்பின் முனையை
ஞாபக விரல்கள்
நிமிண்டிய படியே?

மடித்த பக்கம்
தடித்த தழும்பென
வருடும் வாஞ்சையுடன்
எப்போதும்

ஒருவேளை மடிக்காது
மயில் இறகால்
அடையாளமிட்டிருக்கலாமோ?
எனத்தோன்றும்
மடித்த பகுதி
தற்போது உடையும்
நிலையில்?.......

தீ சுடாதே



வலிதாங்கியே
எனக்கு
அடியின்
பயம் அற்று
போச்சு

என்ன புண்ணில் தானே
தீ சுடுவாய்,
இல்லை
புதிய புண் தருவாய்?

மீதம் இருக்கும்
பாகம் தீரும்வரை
புண்களால்
நிரப்பு ,
காயும்வரை
காத்திருக்காதே
தீயால் சுடு

வலிப்பதாய் நீ
உணர்ந்தால்
கண்களை மூடிக்கொண்டு
எரித்து விடு
தீர்ந்ததா
உன் கோபம்

பாக்கி ஏதும் இடம்
தேடுகிறாயா?
இதோ கண்கள்
குத்திகிழி
வலியில்லை

வலியில்லை
இதயம்
காயப்படாமல்
அப்படியே 
இருக்கு?

நீ
என்ன எவனாலும்
அதில் தங்கியிருந்த
ஞாபத்தை
காயப்படுத்த
முடியுமா
என்ன?

மாண்ட பின்
மண்ணோடு
மக்கிபோகுமேயொழிய
நீ தீ ண்ட முடியாது?

பொதிக்கழுதைகள்


இன்று அதிகம் காணமுடியாத
இனம் ஆகிற்று

ஆனால் 
நர்சரி பிள்ளைகளை
பார்க்க ஏனோ
இந்த ஞாபகம்...?



மச்சம்
=======

எனக்குத் தெரிந்து
எல்லார் மூக்கிலும்
மச்சம்
இருப்பதில்லை

மச்சம் இருந்தாலும்
அது நீயாக
இல்லை

சொற்கள்



வானவில்
ஏழு வண்ணம்
மின்னும்
ஒன்றில் நிலைத்திருக்க
ஒன்று ஊடுரும்
கண்ணில்

சொற்களோ
வண்ணமாய்
மின்னும்
எண்ணக்கோலமிடும்
எண்ண எண்ண
ஜாலமிடும்

மனதை வளைக்கும்
வார்த்தைகள்
பட்டு நூல் இல்லை
பட்டாய்
தைக்கும்
மனதை

எதற்க்கும்
அடியாது
வார்த்தைக்கு
அடியும்
அம்மா என்பது
முதல் வார்த்தை

அதில் பெற்றதே
பல வார்த்தை

சமன்


எதை சமன் செய்ய
மரணம்?
எதை சமன் செய்ய
பிறப்பு?

மேட்டை கழித்தால்
பள்ளம் சமனாகுமா

பிறப்பு மேடா
இறப்பை
பள்ளத்தில்
இடுவதால்
சமனாகுமா?

இழப்பை சமனாக்க
ஏது வழி
மரணம் தான்
பிழைத்தெழுமா?

சமனில் தீர்வாகாதெனில்
சமாதானம்
தீர்வாகுமோ
இங்கு
என் வீட்டு நிலைக்கண்ணாடியின்
பின் குடியிருந்த
சிட்டுக்குருவி

சில நாட்களாய்
வருவதில்லை தன் இருப்பிடத்திற்க்கு
உன் உருவப்படம்
ஒழித்து பாதுகாத்த
இடம்

மாற்றியதிலிருந்து?
விடைபெற்றேன் ஒரு மதியம்
பின் நீ வந்தாய்
வேண்டுமென்றே கை
வீசினேன்
பின்புறமாய்

என் விரல் தொட்டதெதையோ
நீ அறிவாய்
என் விரல்
அறியும்
நானறியேன்?

ஆசை



ஆசையில் ஒரு முறை
தொட்டுப்பார்தேன்
ஆடையில்
உன் வெட்கம்
பார்த்தேன்

மோட்சத்தில்
இருக்கச் செய்தாய்
பின் ஏனடி
நரகத்தின்
வெப்பம் தந்தாய்

ஒ.......
ஒரு மோகத்தில்
உச்சம் தானா
அது?
மிச்சம் ஏதும்
விட்டு வைக்காமல்
விட்டு
வை.....

வின்னேரலாம்
உன் கண் சொருகலில்
முன்னேராலாம்

இடை வெளியில்
இடம்
இல்லாதிருக்க
இடையில்
இடம் கொடுக்க
கொஞ்சம்
கொடு
கொஞ்சி
கொடு......?

மிஞ்சிய போது
கொடு
கெடு.....?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்?
உண்மைதானா இது என்ற உண்மை தெரிஞ்சாகணும்
அதற்க்கு நான் ஏன் சாகணும்?

தெரிதால் காணும். தெரியாது காணும்
காணும் எல்லாம் தெரிஞ்சாகணும்

காணாதிருக்க நான் காணாமல் போக
தெரிந்த இதை யார் காண நான் 
காண போகிறென்?


ஒர் ஒரமாகவே நின்று 
உனக்கு நடந்த
சடங்குகளை 
கவனித்தேன்

உன் கண் ஈரமாகவே
இருந்தது
இதயம் கல்லாய்
கணத்ததாலா?

ஏறிட்டும் பார்க்கவில்லை
என்னை,
அறிந்தேன் உன் அங்க
மொழிகளை,

தோழிகளில் ஒருத்தி
கவணித்ததை
உன்
கவண மாக்கினால்
விழியசைவில்லை
விட்டேத்தி பார்வை

உன் அழைப்புக்கு
நான் வந்துவிட்டேன்

வாழ்த்த மனம் இல்லை
அழவும் துணிவில்லை
அறிமுகம்
எவ்வாறு செய்வாய்
என்னை

நான் உன் ஒரமாகவே
நிற்க்கிறேன் எப்போதும்?


இரண்டாம் முறையும்

போதும்? போதும்?.. விட்டு விடு
எதையும் அடையும் வரை
மட்டும் நேர்மையாளனாய்
காட்டிக்கொள்ளும்,

உன்னானின இயல்பு,

காம சங்கமித்திலின் 
ஊடலின் சங்கதி அல்ல இது
விழித்து கொண்டேன் இனி

என்னின ஏமாற்றத்தின்
பிறப்போ என என்னிவிடாதே?

கண்ணே, மணியே, கற்கண்டே,
முத்தே, பவளமே, என்பதல்லாம்
உன் காதலுக்கு நீ செய்யும்
மூலதனம்,

சொற்களில் தேன் தோய்த்து
பின் தேகம் தேய்க்கும்
உன் நோய் வார்த்தைக்கு
இனி வசப்பட மாட்டேன்

நீ ஆட்டும் மகுடியில்
ஆடியதாய் நினையாதே
நான் கண்மூடிக்கொண்டேன்
காதிற்க்கு உன் ஆட்டம்
தெரியாது?

எனக்கு தெரியும் விழித்து
கொண்டால் நீ காலில் விழ
தயங்கமாட்டாய்
என்று

உன் மூலதனம் வீணாகாது
கொள்ளை லாபம் கொள்ள
துடிப்பாய்
உன்னின இயல்பை
அரிவேன்

விட்டு விடு என்னை

விசம் கொட்டிவிட
வாங்கவில்லை

குடித்து சாகிறேன்
என் செய்வது

கற்புடன் அல்லோ படைத்துவிட்டான்?


சத்தியமா சொல்றேன் நேற்று
கொசுக்கடிக்கு 
பயந்துதான்

முகத்தை மூடிக்கிட்டு
தூங்கினேன்
உன்னைபார்த்தல்ல..?

சத்தியமா கொசுக்கடி
இல்லை தெரியுமா?

வருதமில்லை எனக்கு
வா என அழைக்காமல்
இருப்பதால்

வருத்தமில்லை எனக்கு
வந்திருந்த என்னை
கண்டும் காணா
இருப்பதால்

வருத்தமில்லை எனக்கு
உனக்குப் பதிலாய்
உன் சோதரி தேநீர்
கொடுத்ததால்

வருத்தமில்லை எனக்கு
விடை பெருமுன் கண்கள்
தேடியதுன்னை]

வாசல் வரை வந்து
வழியனுப்பி
கண்ணத்தில் செல்லமாய்
கிள்ளிய நாட்கள்
போதும் எனக்கு

நான் அந்த நாட்களிலேயே
இருக்கிறேன்
நீ இந்த நாளை
கொடுக்கிறாய்

வருத்தமில்லை எனக்கு?

வெட்டி விட்டதால் இனி
படர்வதை நிறுத்துவேன்
என என்னாதே

நீ வெட்டியது மேலும்
வளர்வர்தற்க்கே

வெளிக்காட்டி
வேஷம் போடும் மனித
இனமாய் என்னாதே

வேரில் இருக்கே எனதுயிர்
அதை தொடாதே

அதில் என்னோடு என் மண்ணும்
கலந்திருக்கு 

உன் ஆசைக்குதான் அழகுகாட்டி
படற்ந்துள்ளேன் 
பறித்துக்கொள்

என்னை என் மண்ணோடு விடு
நான் வேர், இனம்
நீ 
வேரிலா இனம்

காலம் கூடக்கூட வலிமையாவேன்
நீ
காலம் கூடினால் தளர்வாய்
முதுகொடிய வளைவாய்

வேர் ஊண்டி வெளியாவேன்
காலுண்டிய
நீ 
என் மண்ணுள்
வருவாய்


நீ
புழு,திண்று உருகுலைவாய்
நான்
புழுவையும் திண்று 
உரம் பெறுவேன் 

நான் காடாவேன்
நீ வெரும் கூடாவாய்?


ஏர் உழ ஏங்கி எனை பார்க்கும்
ஆசைமச்சான்

கூருகெட்டு போகுதடா குத்தும்
உன் பார்வை

அதட்டி ஓட்டுறப்போ அந்த
மாடும் மிரளுதடா

என்னை நீ அனைச்சி ஒட்டுரதெப்போ
நெஞ்சி நெனக்குதடா

பாவாடை வயசிலேந்தே பார்த்து
பார்த்து வச்சேன்
ஆசை மச்சான்

கெட்டு போகாது கட்டி காத்த
உன் நெனப்ப

கஞ்சியில தான் கலந்து
ஊத்தி கொஞ்சம்
நா தாரேன்

பிஞ்சு ஒன்னு பிறக்கும் வரை
பிரியாது நீ
இருடா/

நிலத்த நீ பிளக்க ஏரிட்டாய்
வஞ்சி நான் பிழைக்க
ஏறிட்டு பாரேண்டா?

தூக்கம் கெட்டு போச்சுதடா
துணைக்கு உன்ன
தேடுறண்டா?

வெட்கம் விட்டு போச்சுதடா
வெட்டி பேச்சி ஏதுக்கடா?

வெரசா என்ன கட்டிக்கடா
வெவரம் எல்லா 
சொல்லித்தாரேன்?


நம்ம காலம்
+++++++++++
+++++++++++

தலகாணி ஒண்ணு வேணும்_பராசக்தி
தலகாணி ஒண்ணு வேணும்

தானே அது கணிணியாய் மாறும் தரமும்
அதற்க்கு வேண்டும் _பராசக்தி

தொடு திரையாய் அதன் மேலுறை வேண்டும்-அதுவே
நான்காய் மடித்து பையில் வைக்கும்படி வேண்டும்_அதில்

கூடுதலாய் முகநூலின் நண்பர்கூட்டம் வேண்டும்_தினம்
மொக்கைப்போடும் கன்னியர் கோடி வேண்டும்

பத்து பன்னிரண்டு ஜிங்சா போடும் நண்பரும் வேண்டும்_அதுவே
பார்த்தால் யாரும் மறையும் வன்னம் வடிவமைக்க வேண்டும்

தூங்கும்போது எம்பி திரியா காதிற் பாட்டிசைக்க வேண்டும்_துயரத்தில்
கைகுட்டையாய் மாரி கண்ணீர் துடைக்க வேண்டும்,

பார்த்தவுடன் மயங்கும் ஆங்கே பத்து பதினைந்து பத்திணிபெண்
வேண்டும்_வெப்பம் தனிக்க ஏ.சி, இணைத்திருக்க வேண்டும்

தலகாணி வேண்டும் பராசக்தி ,தலகாணி ஒன்னே ஒன்னு
வேணும் ?

தாதிமா போயிடுச்சுடா..
நம்மையெல்லாம் விட்டுட்டு
இளம்பிராய முதல்
துக்க செய்தி.,

பரபரக்க இழுத்துச்செல்லப்பட
அழுகை தொடர்ந்துதது
வீடு பூட்ட ஒருமுறைக்கு இருமுறை
இழுத்து பார்த்தது
கேவல் நிற்கவில்லை

சாவு வீடு எப்படி இருக்கும் ஒரு கேள்வி?
வீடு நெருங்கும் வரை!

தெரிந்த சொந்தங்கள்
பார்த்தவுடன் ஓ வென அழுகை
கூக்குரல் புலம்பல் ஒன்றும்
விளங்வில்லை 
உண்ணிப்பாக கேட்கும் வரை.,

மார்பில் அடித்து கொண்டு
தாதி போய்ட்டியா நீ இருந்த
நான் இருந்தேன் நீ இல்லை
இனி நான் எதற்க்கு உயிரோடு
துணியால் தன் கழுத்தை 
நெருக்க அனைவரும்
தடுக்க?

எனக்கும் இப்பதான்
தாதிமாவின் செல்வாக்கென்ன
என தெரிய அழுகை பீரிட்டது?

என்னையும் குளியில் போட்டு
புதைங்களேன் என ரத்த
பந்தம் ஒன்று துடித்தது,

எனக்கு தாதிமாவின் மேல்
மரியாதைகூடியது,
தாதிமாவின்,துணிகளையும்
தாதிமாவின் பொடி டப்பாவையும்,
எடுத்து மறைத்துகொண்ட்டேன்,

புதைக்க எடுத்துச்செல்ல ஒரு
போராட்டமே நடந்தது.,
நான் சிறுவனாம்?
விட்டு போய்விட்டார்கள்
புதைத்தும் வந்துவிட்டார்கள்

வீட்டில் ஒரே அமைதி புலம்பல்
சின்ன சின்ன அனுபவ நினைவு
பரிமாற்றங்கள் ?அது நடந்தது
இப்போதுதான்,

தாதிமாவின் மேல் துணியையும்
பொடிடப்பாவையும் எல்லாரும் பார்க்கும்
விதமாக எடுத்து இதோ நம்ம தாதிமாவின்
பொருள்கள் என சொல்லி முடிக்குமுன்னே

அம்புட்டு பேரும் ஒரே சமயத்தில்
அடப்பாவி பிணத்தோட பொருளை
ஏண்டா எடுத்த தூர வீசு, தூர வீசு
வீசு வீசு என அடித்தார்கள்?

அன்று வீசினேன்
இவர்கள் அழுகையையும்
நடிப்பையும் சேர்த்தே வீசினேன்?

நான் செத்தால் அழாதீர்கள்
தெரியும் உங்கள் அழுகை?


கொள்ளு வாங்கனும்
கொஞ்சம் நெல்லும் வாங்கணும்
குத்தி திங்க உரலு வாங்கணும்
கொட்டி வைக்க குதுரு வாங்கணும்
எலி சுறண்டாதிருக்க
பொறியும் வாங்கணும்

பொறியில் வைக்க தேங்கா
வாங்கணும்
பொறியை வைக்க வீடு வாங்கணும்
வீடு கட்ட இடத்த வாங்கணும்

பிடரியில் அடிப்பட துண்டுதரி
எழுந்து அமர்ந்தான் அம்மாச்சி
தூக்கத்தில் எல்லாம் போச்சி
தூக்கத்தில் சொர்க்கமென்று ஆயாச்சி

தருசா போச்சு நெல்மெலாம்
வெருப்பா போச்சு வாழ்வெலாம்
இனி மருந்து வாங்கணும்
சாக ஒரு மருந்து வாங்கணும்

விவசாயம் சாயம் போச்சு
வெவரம் வருமா இந்த
ஆட்சிக்கு?