அலை


ஆசையில் அடித்து
அணைத்து 
இழுத்து சென்று
சுவைக்க முடியாது,

துப்பிவிட்டு
சுவைத்து முடித்ததாய்
வாயில் நுரைக்கும்
நொடியில்
துடைக்கும்,

தேவையில்லை

காத்திருக்கும் கனவுக்குள்
நுழைகிறேன்,
கண்ணாடியில் பிம்பம்
இல்லை ,

வெளிர் உடைதரித்த
தேவைதைகளுக்கு
விடுமுறையாம்
காளையர்கள்
கை பிடிக்க விருட்டென
வெளியேறுகிறேன்

கடவு சீட்டில் இனி
குறிப்பிட வேண்டும்
காளையர் கனவுக்கு
தேவையில்லை
என,

தெரிந்தது அவ்வளவே


ஒரு கை பாத்திரம்
ஒரு கை மாத்திரம்
துளிகளை தூவியது
பூவாய் நீரை,

மண் மலர்ந்தது 
மழை வரவாய்
மனத்தது,

கால் கெண்டைகாலில்
சொருகிய பாவடை
நனையாது

குத்துகாலிட்டு
குவியும் விரலில்
எழுதும் கோலம்,
யாரும் காணா
கோலம்,

ஜன்னலின் கதவிடுக்கில்
ஒரு கண் கொண்டு
காண தெரிந்தது
அவ்வளவே,

நேற்று பெய்துபோன மழை


எழுந்து கொல்லைக்கு சென்றால் 
,தென்னம்பாலையை காற்று 
தள்ளிவிட்டு 
கொய்யாவின் முதுகை 
பதம்பார்த்திருந்தது ,

வலியில் துடித்து 
கிளைகலை
அசைக்காமல்
துயரம்மிகுந்து
யார் வருவர்
என எதிர்பார்த்து?

சுற்றி இருந்த
நார்த்தை, மாதுளை
பூவரசு,மா,எலுமிச்சைகள்
செய்வதரியாது,

இடம் கொஞ்சம் பெயர்ந்த
வேதனை வேரில்
மண் அணைப்பை
விட்ட சோகம் வேறு
விசும்பலாய் தெரியும்
மண் பெயர்ப்பு,

ஓடோடி சென்று
ஆறுதலாய்
கிளைத்தடவ
கிளர்ச்சியில்
சலசலக்கும்
இலைகள்,

சுற்றியிருக்கு வேரின
சோதரர்களின் கை கொட்டல்
கிவ்வென காற்றிசைத்து

தலை கனத்த தென்னை,
அன்னார்ந்து பார்க்க
இல்லை நான் காரணம்,
மறுப்பாய்
வீசியகை,

இரு உன்னில் இழுத்து
கட்டுகிறேன் இனி
நீயும் துணை கொய்யாவிற்கென
கட்டிபோட்டு
கட்டியனைக்க தென்னை
சிரிக்க மனம் மகிழ
ரசிக்க கொல்லையில்
மனம் கொள்ளை
போனது,,,,.

நெருங்கிய பின் நொருக்கியவை

நெருங்கிவிட்ட பின்
அதைபற்றிய
கனவுகளும்,
கற்பனைகளும்
நொருங்கிபோய்?

எடுத்த முடிவு

பேசாமல் இருக்க
பேசிக்கொண்டோம்
பார்ப்போமா?
என்று

மணல் வீடு







அலை
கலைக்கும்
தெரிந்தே கரையில்
கட்டும் வீடு,


நீ...
அடிக்கடி கோபிக்காதே
அலை 
வராமல் போனால்
உன் செல்ல கோபம்
நான்
காணாமல் போய்விட
கூடும்....!!!

ஈன்றவளுக்கு எது ஈடு



தாய்க்கு தாயே சமம்
சொர்க்கத்தை காலடியில்
வைத்திருக்கும் தாய்,

வயிற்றில் சுமந்து
வாயிற்படி தாண்டியபோது
ஏற்படும் வலியின்
துளி,
எமக்கு அரியாது,?

குடல் பெருத்து
உரு’’ ஆக்கினாள்
குருதி திரித்து
உணவாக்கினாள்,
வலி பொறுத்து
வெளியாக்கினாள்,

வகையாய் நம்மை
உலகாக்கினாள்,
எதனை ஈடாக்கி
கடன் தீர்க்க,?
கடனாய் நினைத்தா
கருவாக்கினாள்,!

கடன் தீர ஒரே வழி,
மீண்டும் ஒரு
தாயாய் பிறப்பதை
தவிர வேறு வழி????

பிரியம் அரிய


ஒரு ஒப்பந்தம் 
செய்துகொண்டோம்,
இனி பேசவோ!!!
பார்க்கவோ!!!! 
செய்யாதிருப்பது

கால அவகாசம் மாதத்தில்
தொடங்கி 
நாட்களை விவாதித்து
நேரங்களில் யோசித்து
நிமிடத்தில்
முடிந்துப்போனது,

கால அவகாச இடைவெளியில்
யாரேனும் தவறுதலாய்
முந்துவோமாயின்
தண்டனை பெற்றுகொள்வதென,

தண்டனையின் சாரம்சம்
முத்தம்தான் என
முத்த நேரம் கூடுதலாய்
இருக்கவும்
முடிவானது
தவறு செய்வோருக்கு,

ஒப்பந்தம், 
ஒப்புதல் ஆனபின்
தவறுக்கு 
முந்த
தவற்றின் தண்டனை
ஏற்க குற்றவாளி 
கூண்டில் இருவரும்,

முறிந்து போன ஒப்பந்தம்
முத்தத்தில் விரிந்து
 நொடி,
நிமிடம்,நாள்,
மாதம் வருடம்
ஆயுள் என,





கேள்வி


என்னில் உன்னை 
தெரிந்த பின்பு
இத்தனை தவிப்பு,


வெளியே போகாது
காப்பது இனி
என் பொறுப்பு

வரி வரியா?

ஒரே வரியில்
சொல்வதென்றால்
ஓடிபோய்டலாம்
வரியா?

முகத்தை மூடி

ஆசையில் விழுந்தே போனது

 மண்.,

மண்ணில் தவழும் முதுகு,

முதுகில் நழுவும் விரல்,

விரலில் வடியும் வெட்கம்,

வெட்கம் திறக்கும் ஆசை
,
ஆசை பேசும் மெளனம்,

மெளனம் குழையும் சப்தம்,

சப்தம் ஏற்க்கும் வலி
,
வலி தீர்க்கும் இசைவு,

இசை தீர்க்கும் இச்சை,

இச்சை தீர, வேண்டும் 
 
வேண்டுதல் முடிய பிரார்த்தனை

பிரார்த்தனைக்கு காரணம் நீ

நீ இல்லா முடிவு

முடிவில் எல்லாம் நான்

நான் காணும் நீ

நீ என்பதால், நீ

நீமட்டும் நிஜம்.

சொல்கிறேன்

சொல்கிறாய் கேட்கிறேனா?
கேட்கிறாய் திரும்ப
சொல்லாமல்
விழிக்கிறேன்
உன் விழி
வழிவிட்டால் தான்
கேட்கவோ,சொல்லவோ
முடியும்,

கனவை உடைத்து

வந்துப்போன கனவுகளில்
கரையில் ஒதுங்கிபோன
நுரை குமிழியாய்
உடைந்து,உடைந்து
காணாமல் போயே
போச்சு


செய்தி



நிஜங்களை சுற்றி தூங்கும்போது 
பொய் தேடிக்கொண்டிருக்கும்.

ஒளிந்துக்கொள்கிறது
நிஜமென பொய் மகிழ்சியில்,

விலகியிருக்கும் சுற்றில் தெரியும்
நிஜம் கண்டு பொய்,

கொசுவென கடிக்கும் ,

விருட்டென வெளிவரும் நிஜ
கையில்
சிக்கி அடிபடும் பொய் எப்போதும்.

பொய் செத்தும் போகும், தப்பி
போகும் சில நேரம்,

நிஜம் உறங்விடாது பொய்
சுற்றும்,

நிஜம் உறங்கியே விடாது,

அங்கலாய்ப்பு


உயிர்ப்பு இல்லாத ஊசலாட்டமாய்
உன் தரிசனம் மறைத்து,மறைந்து

விடக்கூடிய விரல் பிடிப்பில்கோர்த்தும்,
கோர்க்காமலும்,

பயமாகும் போது தேற்றிக்கொள்ளும்
பாடலாகவும், ஓடலாகவும்,


யாருமே பார்க்காதிருக்க  பிடரியில் கண்ணும்,\
காதும்  சில வேளை கண்ணாக

சூல் சுமக்கும் தாயாய்  வலம் இடம்
பிரளாமல்  நீண்டி நிமிர்ந்த படுப்பாய்,

தொற்றிக்கொள்ளும்  நோய்  பயத்தில்
முதலுதவி என் செய்வதென  அவசரத்தில்

அணைப்பில்   அருகில்  இருக்க  தூரம்
தாவும் தவிப்பாய் கை பரபரப்பில்

சூட்டிக்கொள்ளும் பூவில்  மணம்  இருக்க
தலை  முகர்ந்த  மூக்கில்  சுவாசம் மறுக்க,

நிலைப்படியில் இடித்த  தலை தடவ
கையில்  சம்மட்டியாய்  விழும்
தழுவல் கூட,

புதிது



தேள் கொண்டு செல்லும்
திருடன் தீண்டும்போது
கொட்டும்

அக்னி


மர பொந்தில் வைத்த
குஞ்சு 
வனம் முழுதும்
சாம்பல்,

என்ன மாயம்

இரவின் முடிச்சவிழ்க்க
வெட்ட வெளிச்சமானது
எல்லோரும்
பார்க்க,

உள்ளாடை அளவு கேட்டு
காதலில் சிற்றின்ப
வெறி,

பேருந்தில் இடி பட்டு
வெளியேற பிரசவ
வலி,

சந்தேகிக்கிறான் கணவன்
கள்ளக்காதலனின்
குற்றச்சாட்டு,

சொர்க்கத்தின் முடிவு
நரக வாசலிலிருந்து
ஆரம்பம்,

கதைக்கும்,கவிதைக்கும்
வி”தைத்திருக்கும்
உறவு வரிகளாய்,