மனைவி -


ஒன்றுமே தெரியாது
என்பது போல் இருக்கும்
எல்லாம் தெரிந்தவள்,

நிஜமாய்

உன்னுடன் இருக்கும்போது மட்டும்,
உலகில்
நான் ஒரு பறக்கும் தட்டு,

கினியவள் அன்பிற்க்கு



கசக்கி வீசிய 
காகிதத்தில்தான்
கருணையின்
மரு உரு நீ
என்றெழுதியிருந்தேன்,

பட்டும் படாமல்
தொட்டு தூக்கும்
குழந்தைக்கு
தெரியாது நீ
பாச பகட்டி என்று,

மழை நாளில்
குடை மறக்க
சேர்ந்து செல்ல
எண்ணும்போது
மடக்கியது குடையல்ல
மனமென்று நீ
அறிவாயோ?

என்ன காரணம்?


உன்னைக்காண 
காரணமாய்
சில காரணங்களை
செய்கிறேன்,

அதற்க்கும் நீ
காரணம்,