பிரார்த்தனையுடன்

விடுதலை

நாளையுடன்

முடிந்து விடப்போகிறது

தீர்வுக்கான சந்தேகம்,

பெரும் கேள்விகள் தீர்ந்து

பெறாக்கேள்விகள்

ஊர்ந்துருகும் நாளையுடன்

விடுதலை உனக்கு,

நீ சொல்லி முடித்தால் தவிர

நாளையுடன் விடுதலை

பிரார்த்தனையில் இரு,

பிரியாதிரு,

தீரவே

இந்த இரவு
கூட்டிய கேள்விகள்
ஒதுக்க முடியாமல்
நிற்க்கிறது,?
விடிந்ததும்
அடுத்த இரவில்
கேட்கவே,
தீர்ந்துடுமோ துயரம்,
காத்திரு கேட்கனும்
திறந்த மனதோடு,
நிறைந்து போகுமோ
அடுத்த இரவில்
நில்,கொஞ்சம்
இந் நீள இரவு
விலகட்டும்,

நினைவு ஏடுகள்,

இதொன்றும்
பாதகமில்லை,
படுத்தும் இரவில்
படும்பாடுகள்,
உன் நினைவேடுகள்
படபடக்க நிதானம்
இன்றி,,,,,,,

புற்றில்

வாய்ப்புகளில் கிடைத்த கரும்புகள்
வாரம் தோரும் வாய்க்கபெற்றால்,
எறும்பென அங்கேயே கூடு கட்டி
குடியும் இருப்பேன்,

முதல் அழுகை

முதன் முதல் அழுத முகம்,
முழுதும் கண்ணீர் இதயத்தில்
ததும்பி வர அடைக்கிறேன்
நிலவு அழுதது நிஜமே,
வலியில் உணர்வாரோ

அது சுயம்,

நேர்த்தி மிகு வார்த்தை
வளைவு, நெளிவுகளில்
சிக்காத வாகன ஓட்டிப்போல்
அழகிய சிந்தை ஓட்டம்
வேகத்தடையில் ,
ஏறியதுமறியாது
இறங்கியதுமறியாது,
சீர் ஓட்டம் 
உனது வார்த்தை,
திறம்பட செதுக்கிய 
சிற்பி நீ,

உன் திறன்

நேர்த்தி மிகு வார்த்தை
வளைவு, நெளிவுகளில்
சிக்காத வாகன ஓட்டிப்போல்
அழகிய சிந்தை ஓட்டம்
வேகத்தடையில் ,
ஏறியதுமறியாது
இறங்கியதுமறியாது,
சீர் ஓட்டம் உனது வார்த்தை,
திறம்பட செதுக்கிய சிற்பி நீ,

சேரா இடம்

ஆழ்மனதில்
வீழ்ந்துக்கொண்டே
இருக்கிறேன்
தரை சேராது,?

யுகி

முகம்பார்த்து அகம் சொல்லும் நீ
யுகம் பல ஆனாலும் மறக்காது,
சுகம் இது போல் சேர்க்காது,
மனதில் என்றும்,

வார்த்தை விலங்கு

உனக்கு விளக்கமாக
சொல்லுமுன்
விலங்கிட்டு
கொள்கிறது
வார்த்தைகள்
வெட்கத்தில்,

வழி தேடி...

ஏதேனுமொன்றில்
வலிக்கான மருந்திருக்காதா?
தேடிய போது
வருடிய வார்த்தைகளில்
காயங்கள் மறைகிறது,
இதான் உண்மை என்ற
காரணமும் தெரிகிறது,