வாய் திறப்பது
மூடிய கதவில் மட்டும்,
மற்றபடி தட்டின்
செல்லா காசே தட்டும்
கதவை,
பாத்திரம்,
ஏந்தும் பாத்திரம் முன்பு
ஒரு பாத்திரமாய்
இருந்ததே,
துச்சம் என்றானபின்
எச்சம் என்ன?
மிச்ச மீதியில்,
வீதியில் வீசப்பட்ட பின்
நீட்டலே குறி ,
விதியில் வீசியது,
நிசப்தம் வேண்டும்
என் சத்தம் விழ,
விழும் சத்தம்
தட்டில்,
வேலை ஒன்றே,
ஏந்தி இருத்தல்
ஏந்தலுக்காய்,
தர்மம் விழும்
தட்டில்,
இரக்கமாய்,
விழும் காசு
இசைக்கும்
ஈனஸ்சுரமாய்,
செல்லா காசே தட்டும்
கதவை,
பாத்திரம்,
ஏந்தும் பாத்திரம் முன்பு
ஒரு பாத்திரமாய்
இருந்ததே,
துச்சம் என்றானபின்
எச்சம் என்ன?
மிச்ச மீதியில்,
வீதியில் வீசப்பட்ட பின்
நீட்டலே குறி ,
விதியில் வீசியது,
நிசப்தம் வேண்டும்
என் சத்தம் விழ,
விழும் சத்தம்
தட்டில்,
வேலை ஒன்றே,
ஏந்தி இருத்தல்
ஏந்தலுக்காய்,
தர்மம் விழும்
தட்டில்,
இரக்கமாய்,
விழும் காசு
இசைக்கும்
ஈனஸ்சுரமாய்,