கொண்ட கொள்கை

துரத்தும் துன்பம்
தூரத்திலும் துயரம்
இருப்பதிலும் வலிகள்
இயக்க மறுத்தாலும்
கடக்கும் நாட்கள்

தூக்கம் ஒரு விரயம்
தூங்காதே இனி
தட்டிக்கொடுக்கும்
நம்பிக்கையில்
நகரும் பாதை

நடுக்கமான நிகழ்வு
நாக்குளரும்
நதி வற்றிய வண்டலாய்
ஏங்கும் ஏக்கம்

தொடும் உச்சி தூரம் இல்லை
அருகில் இழுக்க
கயிரொன்று தரித்தேன்
சிலந்தி வலை
நூலில்

சிக்குண்ட ஈசலாய்
விழும் மனமே
வீசிவிடு விழனும்
மாங்காய் இல்லை
கல் விழும்
தீரும்......?
நாளும்  அருகே

No comments:

Post a Comment