அவளுக்கும் அவனுண்டு



ஊமை கிழச்சி அவள்
பொடிமட்டையில்
வாழ்க்கை,

யாரிடமும் கேட்டதில்லை
பணம் ,
கேட்பது பொடி,
போராடி கேட்க
புதிர்போல்
விரித்தால் பொடிமட்டையை

அவன் ஒரு நாள்
பழகினான்,
அவன் போனதும் பழக்கம்
போகவில்லை,

சுவாசிப்பில் அவனை
திணிக்கிறேன்,
யாசிப்பில் அவனை
நினைக்கிறேன்,

போட்டாள் ஒரு போடு
பொடி மணத்தோடு,
சைகையில் அவன்
மடியென
திண்னையில்
சாய்கிறாள்,

No comments:

Post a Comment