இன்பம் மட்டும் போதுமாய்

அடர் வாழ்க்கை
அங்கொன்றும்,
இங்கொன்றுமாய்
இலகுவாய் நகர்த்தி
இடர் விழாது ,

இன்பத்தேன் வேண்டி
கலைக்கும் கூடு,
கொட்டும் தேன்
குடம் நிரம்ப குடிக்கவா
முடியும்,குமட்டும்

ஏன் கலைத்தல்?
சொட்டும் தேன்
சொற்ப காலம்,
காத்திருப்பில்
அவசரம்,

காண மறையும்
கற்பனையில்
நுழைத்து,
அங்கலாய்க்கும்
அவசியம் ஏன்?

எல்லாம் விதி வழி
எனில் வழியில்
மிதியடியாய்
கிடக்க மிதித்து
செல்லும் மிருக
எண்ணம்,

No comments:

Post a Comment