முகநூலில் இப்பல்லாம் எழுதுவதைவிட மற்றவர்கள் எழுதியதை படிக்கவே யப்பா....

கூட்டத்தில் துறுத்திக்கொண்டு
தெரிய 
அடையாளமாய் ஒர்
கொம்பேனும் வேணும்,

சம நிற, மாற்ற பகரமாய்
வெண்நோயேனும்
வேணும்,

அப்பன்,பாட்டன் அடையாள
அட்டை நகலிலாவது
நன்றறிந்தவர் எனும்
நற்பேராவது
வேணும்,

மணக்கும் மன்றத்தில்
வீச்சமாய் வித்தியாசம்
காண வேணும்,

எதில் எரியப்பட்டலாலும்
மீண்டு எழும் மனம்
மயங்காதிருக்க
வேணும்,

யார் காண வேணும்
யாரை காண வேணும்
ஒரு கண் என்னை
பார்க்க வேணும்,

No comments:

Post a Comment