ஒப்பீடு

வழிந்து கொண்டிருக்கும் 
நீர் திவளைகளில்
பிம்பம் பிரதிபலித்து
சிந்திக்கொண்டிருக்கிறது
நினைவுகளை,

விரலிடுக்கு வழி மறைக்க
வருடிவிட்டு செல்லும்
நீராய் எப்போதும்
நீ ,,?

தரை தொடும் துளி
ஆவியாய் பறக்குமுன்
பற்ற நினைக்கும்
தரையாய்
காய்ந்தே நான்?

ஓட்டை பாத்திரம்
சேமிக்க முடியாது
இருந்ததை எண்ணி
வழிந்த வாசல்
மூட இயலாது
திறந்தபடி?

No comments:

Post a Comment