இப்போதே

மழை தூறி முடிந்த காலை ,
குளித்து துவட்டா 
மங்கை கூந்தலாய்
விரிந்திருக்கும் தார் சாலை
சொட்ட சொட்ட

நெடுஞ்சாலை,
இருசக்கர
வாகனம்,
முகத்தில்
மோதும் சில்லிப்பான
காற்றில் குத்திட்டு
நிற்க்கும் மயிற்கால்கள்,

வயலோரம்,
கோரையின்
தலையில் கண்ணாடி
முண்டாசு துளிகள்,
கதிரவக் கைகள்
தடவும் வழுவிலந்து,

இது போதும் இப்போதே
இறந்து போகவேண்டும்
இயற்கை அணைப்பில்
என்னை மறக்க
இறக்கை இருந்தால்
பறக்க ஆசை,

No comments:

Post a Comment