இரவானதும்

இரவானதும்
---------------------

இரவானதும் ,
இளகிய
முரண்கள்,
காலை முறுக்கிய
மீசை திமிர்
மழுங்கியது
மயிராய்
,
இரவானதும்,
முடியாதென வெளியேறிய
வார்த்தைகள் உள்ளுக்குள்
அர்த்த பிழையில்
மண்டியிட்டு

இரவானதும்,
எதிராய் செயல் படுகிறாய்
கேட்பதில்லை
நான்
சொல்வதை
எதைத்தான் கேட்கிறாய் ,
இதைமட்டும் கேட்க,

இரவானதும்,
பூர்த்தியாக்க படும்
தேவைகள்
சத்திய பிரமாணம்
சாட்சியில்லாது
இருப்பதால்,

இரவானதும்,
அதை விடு நாளை
பார்க்கலாம்
அவசர பிரளயம்
அடங்க இருக்கும்
புயல் அமைதிக்கு,

இரவானதும்.
முகம் திருப்பி படுத்தல்,
குழைவு கோபத்திற்க்காண
தூபத்தின் வாலிலிருந்து
ஆரம்பித்து
முகம்
திருப்ப செய்வதற்க்குள்,
கதிரவன்
கைபிடித்தெழுப்பும்
சமயம் வந்து தொலைகிறது,

No comments:

Post a Comment