வாராய்

பறவையின் இறகை
வாடகைக்கு கேட்டேன்,
என்னுடன் பறந்து வா என்றது,
பறக்கத்தானே கேட்டேன் என்கிறேன்
நீ பறப்பதை பார்த்தபின் தருகிறேன் என்றது,
இறகிலாத போது நீ பறப்பாயா என்றேன்,
இல்லாத இறகை நீ ஏன் கேட்கிறாய் என்றது,
பறந்து போனது புரிந்துக்கொண்டேன் .

No comments:

Post a Comment