பறவையின் இறகை
வாடகைக்கு கேட்டேன்,
என்னுடன் பறந்து வா என்றது,
பறக்கத்தானே கேட்டேன் என்கிறேன்
நீ பறப்பதை பார்த்தபின் தருகிறேன் என்றது,
இறகிலாத போது நீ பறப்பாயா என்றேன்,
இல்லாத இறகை நீ ஏன் கேட்கிறாய் என்றது,
பறந்து போனது புரிந்துக்கொண்டேன் .
No comments:
Post a Comment