அலை தீராது ,அலையும் கடல் தீராது


அலைப்பிடிக்காதாம்
அவர்களுக்கு,
,அடிப்பதாலா?
அடித்து செல்வதாலா?
அலையை பிடிக்க
முடியாததாலா?

அலைக்குத்தெரியுமா
பிடிக்காமல் போன செய்தி?
அலை,
கடலுக்கு மட்டுமா
சொந்தம்,

குடத்தில்  குதிக்குமே
அலை குறுகலாய்
இடையிலும் உருகலாய்
வழியும் அலை ,இடை,

அலை தவிர்த்து போனாலும்
அலைதவிர்க்க முடியாதது,

அலை ஏற்றும்,இறக்கம்
இருக்கும் பின் தான்
இறக்கும் ,

அலை, சிரிப்பென  நுரைக்கும்
அலை  வாரி அணைக்கும்
மோதி மோதி  தன்னை
பெருக்கும் 

அலைத்தான் அழகு  
கடலுக்கு
கொலுசில்லா குமரியின் 
ஆட்டம்,
அலை இல்லா 
கடலாட்டம்

அலை தீராது 
அலையும்  கடல் தீராது

No comments:

Post a Comment