மெளனம் அவிழ்

ஏன் அமைதியாக இருக்கிறாய்
மீண்டும் பற்றிக்கொள்ளும்
என்றா?

எல்லாம் சாம்பலானபின்
எதை எரிக்க மெளனம்
பூக்கிறாய்,

தீ கங்கொன்று உள்ளே,
வீசிவிடாதே
பெருமூச்சிட்டு,

எதைப்பிடித்தேனும்
எரிந்து தொலைத்துவிடும்,

மெளனம் அவிழ்,

No comments:

Post a Comment