நீ வேறு நான் வேறு யார் சொன்னது

சறுக்கும் போதெல்லாம்
உன் வார்த்தை
வேர்களை பிடித்து,

ஏறும்போதெல்லாம்
உதிரும் மண் துகள்
மலரென ஆசிர்வதிக்க

தடித்த வார்த்தை கிளை
சொந்தங்கள்
தடுத்தபோதும்

உன் வேர்
பிடித்த கை விடாது
ஆணி வேராய்
அசையாது எப்போதும்

உச்சாணியில் நீ
அச்சாணியில் எனை
சொறுகி உருட்டும்
ஒவ்வொரு நகர்தலும்,
தொடர்ந்து

No comments:

Post a Comment