எழுந்துறங்க

நேற்றைய 
கனவுகளை 
தலையணையடியிலும்
பாயின் சுருட்டலிலும்
விட்டு விட்டே,

இனி கணமான நிஜத்தில்
நீந்த சில கனவுத்துடுப்புகள்
அசைத்தபடி பயணம்

முன்,பின் அசைத்தசைத்தே
இன்றை கடக்க,
இடையில் மலை.,பள்ளம்,
மேடு சந்தித்தே,

நாளை கனவுக்குள் நுழைய
விரித்தும் புதைந்தும்
பழகிய வழியில்

No comments:

Post a Comment