யாது செய்வாயடி

நீ .....
மறக்க ,மறைக்க செய்யும்
யுத்திகள் சிரிக்கத்தான் 
முடிகிறது,

முகம் திருப்புகிறாய்,
முன்னே கண்ணாடியிருப்பதரியாது,

வசை பாடுகிறாய், வாயொழுகும்
தேன் இசை என்பதரியாது,

சப்தம் இடுகிறாய், யாரையோ அழைத்து,
உன் காதிலாவது எட்டியிருக்குமா? சப்தம...

வாசல் கதவை சாத்துகிறாய் அறைந்து
வெளி செல்லாது உள்ளேரி.,

பரிசுகளை தூர வீசுகிறாய் முதுகின்
பின் விழுந்தவைகள் வீசத்தெரியாது

கோபப்பார்வை உனக்கு கொஞ்சமும்
பொருத்தமில்லை வீணாய் ஏனோ,

மிரட்டிப்பார்க்கிறாய் உன்னை மீரி
வரும் சிரிப்பை அடக்கி,

கடைசி அஸ்திரமாய் கண் சிவக்க
காட்சி தரப்போய் கொஞ்சும் கண்களில்

குளமென கண்ணீர் ததும்ப கைகூப்பி
காரணம் யாதென் கேட்க,

காதலடி இது,!

No comments:

Post a Comment