வாழும் வரை போராடி

கடலை குமிழிக்குள் 
அடைத்துவரும் 
நுரை கொஞ்சம் வாழ
தஞ்சம் கேட்கும்
கரையிடம் ,
உடையாதிருக்க
உறைவிடம் கேட்டு,

ஒவ்வொரு குமிழிக்குள்ளும்
ஒவ்வொரு சமுத்திரம்,
கடல்
பிம்பம் தாங்கி
கரையிடம் சேர்க்க
நுரைகூட்டமாய்

விரல்சேர்த்து அள்ளுகிறாய்
கடல் மண் சேர்த்தும்
அள்ளும் கையில்
தான்
மட்டுமிருக்க
நுரை குமிழை
கிள்ளிவிடும் மணல்
கடல் விரலிடுக்கில்
வழிகிறது வாழாது?

No comments:

Post a Comment