சகித்துக்கொள்

உடைத்து வெளியேற 
பூட்டி இருக்கவில்லை!!

தாவிச்செல்லவும்
பள்ளமாய் இல்லை!!!

அறிந்து கொள்வதற்க்கு
அறியாதவன் இல்லை?

ஏனோ? விளக்கப்பட்டதாய்
உள்ளே ரீங்காரம்

இல்லாத ஒன்றை திடிரென
வெளியாக்கிய பெருவெடிப்பாய்,

மூடிக்கொள்ளும் மலரிடத்தே
மலர செய்ய மகுடி ஆடி,

மறுப்போறை ஏற்போராக்கும்
இழிசெயலாய் திணிக்கப்படும்,

எண்ணக்கழிவை எதன் மேல்
வீசுவது,?

உமிழச்செய்யும் ஒவ்வொரு
துர் வாடையில் துயிலும்,

வேட்கையில் விதி மேல்
பலிபோட்டு தப்பிக்க

தனதாக்கி தலையணை
பொந்தில் நுழைந்து

விடியும் வரை விழிக்குள்
வீண் எனக்கூவுது

குரல் வலை அறுந்த
சேவல்...

No comments:

Post a Comment