சிக்கவைக்க

தொடுதலில் இல்லாத உணர்வை
பார்வையில் கொட்டினாய்,

ஓவியன் தீட்டாத வண்ணம்
கண்ணத்தில் கூட்டினாய்,

பயணம் போகாத மனதை
சுற்றி சுழலவைத்தாய்,

கண்ணாடிக்காட்டாத உருவம்
கண்ணடியில் சிக்கவைத்தாய்,

தூண்டிலில் சிக்கும் மீன்
மீனிடம் சிக்க தூண்டினாய்

பாதையே இல்லை ஊருக்கு
உன் பேரில் வீதியாக்கினாய்,

எட்டிப்பிடிக்கும் தூரம் நிலா
எட்டிலும் தூரம் போய் நில்லாய்,

கல்லறையில் மேலே கள்ள அறை
எப்போதும் காண்பாய்

கண்ணீர் துடைக்கும் விழி
வழிதலில் வலித்தாய்

மனம் கசக்கும் மலர்
துவளும் கை தண்டாயானாய்.

No comments:

Post a Comment