பிரிக்காதே

நானும், நீயும் நகர்த்தும்
நாட்களில் வயதோடு
வாழ்வும்
மனதோடு சோர்வும்
நிழலாய்,

முடிந்த மட்டும்
முதிர்ச்சிக்கு முன்
முடித்துகொள்ள
வேண்டும்
நிஜத்தை,

காகித கசங்களாய்
பார்த்து பார்த்து
பிரித்த நம் கனவுகள்,
எரிந்த காகித சாம்பலாய்
காற்றில் படபடக்க
கனிந்துருகும்,

எப்போதும் ஏக்கம்
மீதமாய் அதன்
தாக்கம் கொல்லும்
தாகமாய் தவித்து
தவித்தே ,

Comments

Popular Posts