கனவி;ல்

ஒரு கனவு
அதே ஆடையில்
அதே புங்கை மரத்தடியில்
பெயர் செதுக்க
பெயர்க்கிறாய்
பட்டையாய் ,

இக்கனவில் இரண்டு
கோடாரிகள்
ஒன்று பிடி இல்லாது
பரிசென தர

மறுப்பாய் விலகுகிறேன்
காட்சி மாறுகிறது
கடலில் .
ஓடம் மேல் நீ
அழைக்கிறாய்
ஓடம் ஓட்டை என

அலை இரைச்சலாய்
சில்லிப்பு
குடிசை ஒட்டையில்
வழியும் நீர்
போர்வை மீறீ
முகம் தொட்டு

துடைக்கிறேன்
கனவை ,

No comments:

Post a Comment