இரவானதும் தனியே-2


விடுபட்டேன்
நீந்துவதில் இருந்து
மூழ்குவதரியாது,

குரல் எழுப்ப
விருப்பமில்லை
என் குரல் உனக்கு
கேட்கும் வரை,

காப்பாற்றி பின்
காணாது
சாவதை விட,
காணாமல் போகிறேன்
கரைகாணாது,

தேடி எடுப்பாய் எனில்
மீன் வயிற்றில்
மீதமாய் ஏதும்
மிச்சம் இருக்கும்,

கரையில் ஒதுங்கிய
கூட்டில் ஏதும்
சதை ஒட்டியிருந்தால்
எடுத்துக்கொள்,

ஏனென்றால்
அதில் நீ இருப்பதால்
பிடித்துக்கொண்டே
இறந்திருப்பேன்,
பீய்த்தெடுத்துக்கொள்,

கூட்டில் ஏதும்
மீதம் இருக்கிறதா
பார்,
ஆம் எலும்புகூடாய்
எழும்பாமல்,

விட்டு விடு
இருந்திருந்தாலும்
இப்படியேதான்
இருந்திருப்பேன்
இறந்திருக்கிறேன்
அப்படியே,

No comments:

Post a Comment