இரவானதும் தனியே-5


சற்று யோசித்திருக்கலாம்
ஆவேசமாய் 
அவிழ்த்த
வார்த்தைகள்
தைத்திருக்கும்,

மூடிச்சு பிரித்து
கொட்டியதில்
சிதறியதும்
தவித்திருப்பாய்,

ஊசியாய் குத்தும்
ஒவ்வொரு சொல்லும்
உதறிய சாக்காய்
உன் மெளனம்
பொசுக்கென,

நுரைத்து அடங்கிய
பால்
மறைத்து படர்ந்த
ஆடையாய்
உள்ளுக்குள்
சூடாய் நீ,,,

மிச்சம் ஏதுமிலாது
நிர்கதியில்
என்
நிர்வாணம்,

Comments

Popular Posts