இரவானதும் தனியே-8



தூது .....

உன் விசாரித்தல்
யார் மூலமோ
சேர்க்கப்படுகிறது
என்னிடம்,

நம்பிக்கையின்
பாத்திரமாய் தூதாய்
வந்தவரிடம்
திருப்புதல்
கிடைக்குமென
காத்திருப்பாய்,

எதில் திருப்தி
கொள்ளுமோ
உன் மனம்
மெளனத்தில்
ஆழத்தில்
மூழ்குகிறேன்,

கண் விழிக்கிறேன்,
வந்தவர் காணாது?
மீண்டும் ஒரு செய்தி
இருக்கிறேன் என்ற
சொல் தாங்கி,

நிம்மதியில்
பூக்கிறது மனம்
என் முகம்
உன்னிடம் காண்பித்த
தூதை எண்ணி,

No comments:

Post a Comment