தோப்பில் உன் மரம்



தனியே ஆடிக்கொண்டிருக்கும்
ஊஞ்சல்,
கடந்து போக
கனம் தாங்காது
விழுந்தழும்
மனது,

விரிய திறந்திருக்கும்
ஜன்னல்
கடந்து போக
விழியகலாது
காத்திருந்தகனம்,

கிணற்று மோடை
துண்டு சோப்பு,
வாளிக்கயிறு
கடந்து போக
கண் மூடி பழகி
கொள்கிறேன்
கொஞ்ச நாளாய்,

கத்தரி வத்தல்
வடகம் கூட்டு,
விட்டு விட்டேன்
உன் நினைவையும்
விட்டு விட
முற்றத்தில்
காய்கிறேன்
பசி,

நீருற்றி நீ வளர்த்த
மா மரம் காய்க்கிறது
கனியாது,
நான் பறிக்க வளையாது
ஏய்க்கிறது
உனை போலவே?

No comments:

Post a Comment