இரவில் முகநூல்

யாருமில்லா தெருவில்
ஒற்றை வெளிசமாய்
காத்திருக்கும்
சாட்டிஸ்டுகள்,

தூர கேட்கும் இரயில்
ஓசையாய் ஓரிரு
கமெண்டுகள்,

பாறைவண்டியின்
கடமுடா சத்தமாய்
இரண்டு மூன்று
லைக்குகள்,

விழித்தழும் குழந்தை
குரலாய் சில,
ஹாய்,ஹாய்கள்,

தாலாட்டிடும் தாயின்
தூக்க பாடலாய்
சில ஸ்டேட்ஸ்கள்

இன்னுமா தூங்கலை
எனும் எதிர் வீட்டு
பாட்டியின்குரலாய்
நடு சாம விசாரிப்புகள்,

நேரமாச்சோ திடுமென
எழும் பால்காரனாய்
சைனவுட்டுகள்,

புரண்டுப்படுக்கும்
துணைவி
தவழும் புதுகதை,
கவிதைகள்,

No comments:

Post a Comment