பழக்கபடுத்திக்கொண்டிருக்கிறேன்
தனிமை தவிர்த்தல்
எப்படி என்று,
மரத்தோடும், இலையோடும்
பேசிப்பேசி
அசைதலில், சொல்லுதற்க்கு
ஆமோதிப்பதாயும்,
அமைதியில், சொல்லுதற்க்கு
கேட்பதாயும்,
குமுறியழும்போது
துடைக்க இலைகள்
முயற்ச்சிப்பதாயும்,
சிரிக்கும்போது காற்று வீசலில்
சலசலப்பாய் சிரிப்பதாயும்,
பழக்கபடுத்திக்கொண்டிருக்கிறேன்
தனிமை தவிர்த்தல்
எப்படி என்று,
விழும் உதிர் இலை,
ஆசீர்வதிப்பதாயும்,
கசியும் பிசினோ கண்ணீராய்
விழுவதாயும்,
அமைதியடைகையில் எறும்பு
கடிக்க மரம்
உசுப்பியதாயும்,
பழக்கபடுத்திக்கொண்டிருக்கிறேன்
தனிமை தவிர்த்தல்
எப்படி என்று,
No comments:
Post a Comment