ஞாபகச்சுட்டி


பழைய புகைப்பட சேர்வை
பிரிக்கும் போது
நிகழ்காலம்
புகையாய்
மறைகிறது,

ஒவ்வொரு படத்திலும்
அத்தியாயம், அத்தியாயமாய்
கதைகள் சொல்லி
நகர்கிறது,

பவுடர் பூச்சுக்கும்,
உதட்டுச்சாயத்திற்க்கும்
கன மைதீட்டலுக்கும்
நீ இப்போது
விளக்கம் கூறி
துடைக்கிறாய்,

விலகி நின்றதன்
காரணத்தை
நீ இப்போது
விளக்குகிறாய்
விலகியது விளங்காது,

தந்துவிடு என்கிறேன்
இல்லை இருக்கட்டும்
படமாகவேணும்,
நீ இப்போதும்
பட்டும் படாமலேதான்
இருக்கிறாய்,

மூட மனமில்லை
திரும்ப திரும்ப
பார்க்கிறோம்
பேரன்,பேத்திகள்
மடியில் இருத்தி.
தனிதனி இடத்தில்,

No comments:

Post a Comment