தூண்டில்காரா....


முள் ,
தொண்டையில்
சிக்கியதை 
உணர்த்தவே
இழுக்கிறேன்,

கவனியாது
காண்பதெங்கே?
நீ,,,
காதலனா என்ன?
முள்ளையும் 


எடுக்காது
என்னையும்


விடாது,

நீ,,,
சற்றே வித்தியாசம்
புழு இட்டு 


பிடிக்கிறாய்

அவன்...
புழுவாக்கியல்லவா
மகிழ்கிறான்

உனக்கெப்போதும்
தக்கையின் மீதே
கண்,

அவனுக்கு
அவ்வப்போது என்
தங்கையின் மீதும்
கண்,

நீ..
வீசீவதில் சிக்கும்
மீனாய்,

அவன்,
வீசுவதில் சிக்கினேன்
வீனாய்

Comments

Popular Posts