இரவானதும் தனியே


வாசனைக்காய் 
போட்டு எடுத்த
கறிவேப்பிலையாய்,

வீசுவதில் கைதேர்ந்தவள்


நீ,,
வதங்கி விழுகிறேன்
நிறம் மாறாது,
எடுப்பாய்
மீண்டும் என,

ஒவ்வொரு முறையும்
புதிதாய் பறிக்கிறாய்
குருதி வடிய,
வண்ணம்வேறு ,
வலி
ஒன்றே

தேவை பூர்த்தியானதும்
தேவையில்லை
தேடிவருவாய் என
காத்திருப்பது
கானலே,

இருந்தும் உன் கை
தீண்டலுக்கு
கிளைதாண்டி
வளைந்திருப்பேன்


நீ மட்டும்
பறிக்க,

No comments:

Post a Comment