ஞாபகத்தில் படுத்துகிறாய்,,,,,



யாரும் இல்லா நேரத்தில்
கைகோர்க்கும்
உன் ஞாபகங்கள்,

நெடும் பயணத்தில்
பயண சீட்டில்லாமல்
பக்கத்திலே நீ,,

பார்வை வெளியே
திரிந்தாலும்
முகத்தில் மோதும்
தென்றல் நீ,,

இயந்திர இரைச்சல்
உடைக்கும் உன்
மெளன பேச்சு,

முட்டிக்கொண்டு வரும்
கண்ணீர் துளியில்
ஞாபகம்
கரையாதிருக்க,

நிதர்சனத்துள்
நுழைகிறேன்
விநாடிக்கு குறைவான
நேரம்,

No comments:

Post a Comment